இருவருக்கு டெங்கு
தென்மராட்சி நவ.30
மட்டுவில் சந்திரபுரம் பகுதியில் இருவர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர் என இனக்காணப்பட்டதையடுத்து அந்தப்பகுதியில் டெங்கு ஒழிப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தப்பகுதியில் சாவகச்சேரி பிரதேச சபையின் பங்களிப்புடன் புகையூட்டல் பணிகள் இடம்பெற்றுவருவதுடன் வீடுகள் தோறும் பரிசோதனைகளும் விழிப்புணர்வுச் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
|
குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
வரணி வடக்குப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கணபதிப்பிள்ளை உதயசூரியன் (வயது40) என்னும் குடும்பஸ்தரின் சடலமே மீட்கப்பட்டது.
கொடிகாமம் பொலிஸார் நேற்று சனிக்கிழமை இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிவானிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். நீதிவானின் பணிப்பின்பேரில் கொடிகாமம் பிரதேச திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்குமரன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்.
சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிமூலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.(25.11.12)
யாழ்ப்பாணம் - கொடிகாமத்துக்கான காலை சேவையை நிறுத்திய இ.போ.ச.; அரச பணியாளர், மாணவர்கள் நெருக்கடியில் |
யாழ்.பஸ் நிலையத்திலிருந்து கொடிகாமத்துக்கான பேரூந்தின் காலைச் சேவை நிறுத்தப்பட்டதால் தென்மராட்சிப் பிரதேச அலுவலகங்களில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உரிய நேரத்துக்குக் கடமைக்குச் சமூகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னர் காலை 8 மணிக்கு யாழ். பஸ் நிலையத்திலிருந்து கொடிகாமத்துக்கு சேவை இடம்பெற்றது.
இந்தச் சேவையை யாழ்ப்பாணத்தில் இருந்து கைதடி, சாவகச்சேரி, கொடிகாமம் ஆகிய பிரதேச அலுவலகங்களில் பணிபுரிவோர் பருவகால பயணச் சீட்டைப் பெற்றுப் பயணத்தை மேற்கொண்டு வந்தனர்.
இந்தச் சேவையில் நாவற்குழி, கைதடி, நுணாவில், சாவகச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் பணியாளர்கள் பயணித்தனர். தற்போது இந்தச் சேவை நிறுத்தப்பட்டால் அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் தமது கடமைகளுக்குச் செல்வதற்குப் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையான தனியார் பஸ்கள் புறப்படுகின்ற போதிலும் கொடிகாமம் வரை செல்லும் அரச பணியாளர்களை ஏற்றிச் செல்ல மறுக்கின்றனர்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமத்துக்கு புறப்படும் தனியார் சிற்றூர்திகளும் பஸ் நிலையத்திலேயே அளவுக்கதிகமான பயணிகளை ஏற்றி வருவதால் அவற்றிலும் பயணிக்க முடியாத நிலை அரச பணியாளர்களுக்கு ஏற்படுகின்றது.
இந்த நிலையில் வார நாள்களில் காலை 7.30 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் ஒரு சேவையை யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் வரை நடத்துமாறு இ.போ.ச. வடமாகாண பொதுமுகாமையாளரை தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள அரச, வங்கி கூட்டுறவு அலுவலகங்களில் பணிபுரிவோர் கேட்டுள்ளனர்.21.11.12.U
|
70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவருக்கு பெறுபேற்றுச் சான்று
தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளில் கடந்த ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 70 இற்கு மேல்புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் முகமாக இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் கல்வி வலய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சான்றிதழ்கள் அந்தந்தப் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாடசாலைகளில் நாளை திங்கட்கிழமை நடைபெறும் நிகழ்வுகளில் அதிபர்களால் மாணவர்களுக்கு இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
பரீட்சையில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வை பாடசாலைகளில் பாராட்டு விழாவாக நடத்த வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(18.11.12உதயன்)
தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளில் கடந்த ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் 70 இற்கு மேல்புள்ளிகள் பெற்ற மாணவர்களுக்கு பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் முகமாக இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் கல்வி வலய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சான்றிதழ்கள் அந்தந்தப் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. பாடசாலைகளில் நாளை திங்கட்கிழமை நடைபெறும் நிகழ்வுகளில் அதிபர்களால் மாணவர்களுக்கு இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
பரீட்சையில் ஒவ்வொரு பிரிவிலும் தலா 35 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வை பாடசாலைகளில் பாராட்டு விழாவாக நடத்த வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(18.11.12உதயன்)
மட்டுவில் வடக்கு அ.த.க. பாடசாலையில்
இடம்பெற்ற உலககைகழுவுதல் நிகழ்வின்போது
மாணவர்களின் செயற்பாட்டை பாடசாலை அதிபர்
ச. கிருஷ்ணன், பிரிவு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்
தவசிநேசன் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிடுகின்றனர்.
|