1.7.15

செய்திகளில் ஊரும் அயலும் JUL-DEC 2015



சாவகச்சேரியில் 22கிலோ எடையுடன் வெங்கடாந்தி பாம்பு! அச்சத்தில் மக்கள் [15 டிசெம்பர் 2015 ] யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, தட்டான்குளம் பிரதேசத்தில் வெங்கடாந்தி இன பாம்பு ஒன்றை மக்கள் பிடித்துள்ளனர். இன்று காலை 7.00 மணியளவில் இந்த பாம்பைப் பிடித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். 22கிலோ 300 கிராம் எடை கொண்ட இந்தப் பாம்பு 8 அடி நீளமானதாகப் காணப்படுகிறது. காடுகளில் வசிக்கும் வென்கடாந்தி இன பாம்புகள் விலங்குகளை இரையாக உட்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது, இதனால் அந்த பிரதேச மக்கள் பீதியோடு காணப்படுகின்றனர்.







வரணியில் சித்திரவதை இடம்பெறவில்லை : மறுக்கிறார் இராணுவப் பேச்சாளர்
வரணியில் சித்திரவதை இடம்பெறவில்லை : மறுக்கிறார் இராணுவப் பேச்சாளர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளதுபோல் சித்திரவதைகள் எதுவும் இடம்பெறவில்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். தற்போதும் கூட இராணுவம் மனிதாபிமான அடிப்படையிலேயே செயற்படுவதாகவும் இது பொய்யான குற்றச்சாட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது முகப்புத்தகத்தில் யாழ்ப்பாணம் – வரணி பகுதியில் இராணுவத்தின் 526ஆவது படையணி நிலைகொண்டிருந்த வரணி படைமுகாமில் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக  தெரிவித்திருந்ததோடு, இது தொடர்பிலான  புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  அதற்கு பதிலளிக்கும் முகமாக  இராணுவப் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்./Uthayan.3.12










ஐக்கிய நாடுகள் தின நிகழ்வுகள்
ஐக்கிய நாடுகள்  தின நிகழ்வுகள்
சாவகச்சேரி லயன்ஸ் கழகத்தின் ஐக்கிய நாடுகள் தின நிகழ்வுகள் இன்று  பிற்பகல் ஒரு மணிக்கு கைதடி முத்துக் குமாரசாமி மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறும்.

கழகத் தலைவர் லயன் பு.டினேஸ்குமார் தலைமையில் நடைபெறும் நிகழ்வில் ஐ.நா.தினம் தொடர்பான சிறப்புச் சொற்பொழிவை ஓய்வுநிலை பிரதிக் கல் விப்பணிப்பாளர் பி.முத்துலிங்கம் ஆற்ற வுள்ளார். ஐ.நா.தினம் தொடர்பாக தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலைகளின் மாணவர்களிடையே நடத்தப்பட்ட சித்திரம், பேச்சு, பொது அறிவு ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படுமென கழகச் செயலாளர் அறிவித்துள்ளார்.   

      கைதடி சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் அதிகரிப்பு

கைதடி சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் அதிகரிப்பு
26.10.15
கைதடி சித்த மருத்துவ போதனா வைத்தியசாலையில் இந்த வருடம் கடந்த 10 மாத காலப்பகுதியில் 40 ஆயிரத்து 830 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். விடுதி வசதியுடன் செயற்படும் வைத்திய சாலையில் கடந்த 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெளி நோயாளர் பிரிவில் 40 ஆயிரம் நோயாளர்களும் விடுதிகளில் தங்கியிருந்து 830 நோயாளர்க ளும் சிகிச்சைபெற்றுள்ளனர். 
இந்த வைத்திய முறையில் சிகிச்சை பெறவேண்டும் என்ற ஆர்வத்தோடு புலம்பெயர் உறவுகளும் வெளிநாட்டவரும் சிகிச்சை பெற வரு கின்றனர். நாளாந்தம் சிகிச்சை பெற வருவோர் தொகை அதிகரித்து வருகின்றது. என வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி திருமதி.பிறேமா சிவசண்முகராசா தெரிவித்தார். கைதடி சித்த போதனா வைத்தியசாலை ஏ-9வீதியில் கைதடிச்சந்திக்கு அருகில் அமைந்துள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையின் போதனா வைத்தியசாலையாகும். மத்திய சுதேச வைத்திய அமைச்சின் கீழ் செயற்படுகின்றது. தற்போது அங்கு சேவை பெறவரும் நோயாளர் எண்ணிக்கை குறித்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரி வித்தார். 
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :
வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்கு புலம்பெயர் உறவுகள் மற்றும் வெளிநாட்டில் வசிப்போரும் வருகை தருகின்றனர். அத்துடன் நீர் கொழும்பு, சிலாபம், திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இருந்து வருகை தந்து சிகிச்சை பெறுகின்றனர்.



கஞ்சா வைத்திருந்த நபருக்கு சிறைத்தண்டனை
கஞ்சா வைத்திருந்த நபருக்கு  சிறைத்தண்டனை
போதைப் பொருளான கஞ்சா வைத்திருந்த ஹொரவப்பொத்தானை ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2011 ஆம் ஆண்டு சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதி சந்தியில் ஒரு தொகுதி கஞ்சா வைத்திருந்த வேளையில்  நபரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். 
இந்த வழக்கு கடந்த 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, குறித்த நபருக்கு ஐந்து வருடங்களுக்கு  ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.                23.11.15
யா./மட்டு கமலாசனியில் மூன்று மாணவர்கள் சித்தி

யாழ். மட்­டுவில் கம­லா­சனி வித்­தி­யா­லய மாண­வர்கள் மூவர் அண்­மையில் வெளி­யா­கிய புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் சித்­தி­ய­டைந்­துள்­ளனர். ஆ.கஜ­வேந்தன் (171), சி.விஷ்­னுஜன் (165), கௌ.அபி­நயா (159) ஆகியோர் ஆசி­ரியை திரு­மதி சறோ­ஜி­னி­தேவி பிர­தீ­பனின் வழி­காட்­டலில் வெட்­டுப்­புள்­ளிக்கு மேல் புள்­ளியை பெற்று பாட­சா­லைக்கு பெருமை சேர்த்­துள்­ளனர்.
மேலும் க.சஞ்ஜெய் (150), ச.வினயா (146), க.சயந்­திகா (145), ச.டிலைக்­சனா (144), சு.மிதுலா (138), வ.துஷிகன் (137), சு.லதீசன் (128), ம.கம்­சவி (127), வை.செல்வி (122), ஆ.அபிஷன் (120), த.போஜினி, அ.நிலக்­சிகா (106), யோ.சுதர்­சினி (103), ரா.நர்­மதன் (103) ஆகியோர் 100 புள்­ளி­க­ளுக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

களவெடுத்த இலங்கை இராணுவத்தினரை விடுவிக்க முயற்சி
http://www.bbc.com/tamil/sri_lanka/2015/10/151017_slarmy 

யாழ்ப்பாணம் கைதடிபகுதியில்ஏ9 நெடுஞ்சாலையில்வைக்கப்பட்டுள்ள பெரிய வீதி விளம்பரப் பலகைகளின் இரும்புக் கம்பிகளையும் இரும்புச் சட்டங்களையும் நள்ளிரவு நேரத்தில் களவாக வெட்டி எடுத்துச் செல்ல முற்பட்டபோது, சாவகச்சேரி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள 7 இராணுவத்தினரை மீட்டுச் செல்வதற்கு இராணுவ அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் அண்மைய தினங்களாக நெடுஞ்சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் மர்மமான முறையில் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதை அவதானித்த சாவகச்சேரி காவல்துறையினர், வெள்ளிக்கிழமை இரவு அந்தப் பகுதியில் இரகசியமாகப் பதுங்கியிருந்து நோட்டம்விட்டபோது, வாகனம் ஒன்றில் வந்த ஏழு இராணுவத்தினர் விளம்பரப் பலகையொன்றின் இரும்புகள் இரும்புச் சட்டங்களை அறுக்க முற்பட்டபோது கையும் களவுமாக அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். 

இவர்களை விசாரணை செய்து இவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்தபோதே, இவர்கள் இராணுவத்தினர் என்ற விடயம் காவல்துறையினருக்குத் தெரியவந்ததாக காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. 

இதனையடுத்து, இவர்கள் பற்றிய தகவல் அறிந்து அது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக இராணுவக் காவல்துறையினரும் சாவகச்சேரி காவல் நிலையத்திற்குச் சென்றனர். 

கைதான இராணுவத்தினரை மீட்டுச் செல்வதற்காக இராணுவ அதிகாரிகள் தமது மெய்ப்பாதுகாப்புக்கான இராணுவத்தினருடன் சாவகச்சேரி காவல் நிலையத்தைச் சூழ்ந்திருப்பதாகத் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை, நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைவாகவே கையாள வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர்களை இராணுவ அதிகாரிகளிடம் கையளிக்க முடியாது என்றும் காவல்துறையினர் இராணுவ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.










நுளம்புப் பெருக்கத்துக்கு ஏதுவான சூழல் : மூவருக்கு தலா 3 ஆயிரம் ரூ.அபராதம்
நுளம்புப் பெருக்கத்துக்கு ஏதுவான சூழல் : மூவருக்கு தலா 3 ஆயிரம் ரூ.அபராதம்
நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான நிலையில் குடியிருப்புகளை வைத்திருந்த மூன்று பேருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் தலா 3 ஆயிரம் ரூபா வீதம் அபராதம் விதிக்கப்படடுள்ளது. 

கடந்த வாரம் சுகாதாரப் பகுதியினருடன் இணைந்து டெங்குக் கட்டுப்பாட்டு வாரத்தில்,குடியிருப்புக்கள் மற்றும் காணிகள் தரிசிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார்,நுளம்புப் பெருக்கத்துக்கு ஏதுவான நிலையில் காணிகள் மற்றும் குடியிருப்புக்களை வைத்திருந்த மூவருக்கு எதிராக  நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்தனர்.
 
வழக்குகளைத் தனித்தனியாக விசாரித்த நீதிவான் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து தலா 3 ஆயிரம் ரூபா வீதம் அபராதம் விதித்தார். இதே வேளை மதுபோதையில் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய நபர் ஒருவருக்கு 8ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர் பொலிஸாரால் கைது

சட்ட விரோதமாக மின்சாரம் பெற்றவர் ரோந்து சென்ற பொலிஸாரிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.இந்தச் சம்பவம் வரணி மாசேரியில் இடம்பெற்றது. குறித்த நபருக்கு எதிராக கொடிகாமம் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் கடந்த 25 ஆம் திகதி வழக்குத் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிவான் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆள்பிணையில் செல்ல அனுமதித்து, வழக்கை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Uthayan 29.9,15

இறுதிப்போட்டியின் வெற்றியாளர்கள்


ட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக்கழகம் 2015ம் ஆண்டுக்காக நடாத்திய மாபெரும் கரபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டிகள் மோகனதாஸ் விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்புற நடைபெற்று முடிந்தது. போட்டிக்கு வருகைதந்த சிறப்பு விருந்தினர்களுடன் இடம்பெற்ற மங்கள விளக்கேற்றல், கழகக் கொடியேற்றல் மற்றும் வீரர்கள் அறிமுகம் என்னும் நிகழ்வுகளின் பின்னர் ஏ மற்றும் பி பிரிவுகளுக்கான இறுதிப்போட்டிகள் நடைபெற்றன.

A பிரிவில் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து இளைவாலை மத்தி விளையாட்டுக்கழகம் மோதியது இப்போட்டியில்இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் 3:1 என்ற செற்கணக்கில் வெற்றி பெற்று A பிரிவில் சம்பியனாகியது.

B பிரிவுக்கான இப்போட்டியில் நாயன்மார்கட்டு பாரதி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து தோப்புவாலிபர் விளையாட்டுக் கழகம் மோதியது இப்போட்டியில் நாயன்மார் கட்டு பாரதி விளையாட்டுக் கழகம் 3:2 என்ற செற்கணக்கில் வெற்றி பெற்று B பிரிவில் சம்பியனகியது.

போட்டிகளின் இறுதியில் போட்டிகளில் பங்கேற்ற கழகங்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.




இறுதிநாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்
மோகனதாஸ் விளையாட்டுக்கழகம் நடாத்துகின்ற மாபெரும் கரபந்தாட்டப் போட்டியின் இறுதிநாள் போட்டிகள் நாளை மாலை மோகனதாஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றவுள்ளன. அப்போட்டியில் பங்கேற்கவுள்ள முக்கிய விருந்தினர்களையும் நிகழ்ச்சி நிரலினையும் இங்கே நீங்கள் காணலாம்.

நாளைய இறுதிப்போட்டியில் மோதவுள்ள கழகங்கள்




கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிகள்



மோகனதாஸ் விளையாட்டுக்கழகம் மின்னொளியில் நடாத்திய மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிகள் எதிர்வரும் 23.09.2015 புதன் பி.ப 7.00 மணியளவில்கழக மைதானத்தில் இடம்பெறும் என்பதனை ரசிகர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

இப்போட்டியில் மோதும் அணிகள்

ஏ பிரிவு
ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகம்
எதிர்
இளவாலை மத்திய விளையாட்டுக்கழகமும்

பி பிரிவு
அச்சுவேலி தோப்பு வாலிபர் விளையாட்டுக்கழகம்
எதிர்
நாயன்மார்கட்டு பாரதி விளையாட்டுக்கழகம்

இறுதிப்போட்டிகளில் மோதும்கழகங்கள











மோகனதாஸ் விளையாட்டுக்கழகம் மின்னொளியில் நடாத்திய மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டிகள் எதிர்வரும் 23.09.2015 புதன் பி.ப 7.00 மணியளவில்கழக மைதானத்தில் இடம்பெறும்.


இப்போட்டியில் மோதும் அணிகள்


ஏ பிரிவு
ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக்கழகம் 
எதிர்
இளவாலை மத்திய விளையாட்டுக்கழகமும் 

பி பிரிவு
அச்சுவேலி தோப்பு வாலிபர் விளையாட்டுக்கழகம்
எதிர்
நாயன்மார்கட்டு பாரதி விளையாட்டுக்கழகம்
-----------------------------------------------------------------------------------------

சாவகச்சேரியில் வெடிபொருட்கள் மீட்பு 

20.09.2015

யாழ்.சாவகச்சேரி நகரில் கைவிடப்பட்ட கிணற்றிலிருந்து நேற்று முன்தினம் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மற்றும் கைக்குண்டுகள் மீட்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் கிணற்றிலிருந்து மேலும் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சாவகச்சேரி பொலிஸார் குறித்த கிணற்றை சோதனையிட்ட நிலையில் கிணற்றிலிருந்து 3 ஆர்.பி.ஜி குண்டுகள் மற்றும் அவற்றுக்கான புறப்பாளர்கள், பாதுகாக்கப்பட்ட பெட்டியில் 1250 தோட்டாக்கள், உதிரியாக ஒரு தொகை தோட்டாக்கள், 7 கைக்குண்டுகள், படையினர் அணியும் ஹெல்மட் ஆகியனவும் மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






யாழ்ப்பாணம் - மீசாலை – புத்தூர் சந்தியில் வாகன விபத்து

இருவர் உயிரிழப்பு யாழ்ப்பாணம் - மீசாலை – புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் ஒன்று பாதைவிட்டு விலகி மதிலுடன் மோதியதாலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
18.8.2015

5.8.2015 
சிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில்; தந்தை தீக்குளிப்பு
 Virakesari on Wed, 08/05/2015 - 09:33

கொடி­காமம் பிர­தே­சத்தில் 16 வயது சிறு­மி­யுடன் சேர்ந்து வாழ்ந்த அதே இடத்தைச் சேர்ந்த இளைஞர் ஒரு­வரை எதிர்­வரும் 14ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு சாவ­கச்­சேரி நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. கொடி­காமம் கச்சாய் வீதியைச் சேர்ந்த 21 வய­து­டைய இளை­ஞனும், 16 வய­து­டைய சிறு­மியும் காணாமற் போன­தை­ய­டுத்து சிறு­மியின் பெற்­றோர்­களால் கொடி­காமம் பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

 சம்­பவம் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பொலிஸார் குறித்த இளை­ஞனும் சிறு­மியும் சேர்ந்து வாழ்­வதைக் கண்­ட­றிந்து அவர்­களைக் கைது செய்து விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தினர். இதனால் சிறு­மியின் தந்தை தீக்­கு­ளித்­துள்ள நிலையில், சாவ­கச்­சேரி ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

 குறித்த இரு­வ­ரையும் பொலிஸார் நேற்று சாவ­கச்­சேரி நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­ய­போது, குறித்த இளை­ஞனை எதிர்­வரும் 14ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்ட பதில் நீதிவான் செ.கண­ப­திப்­பிளை, சிறு­மியை கைத­டி­யி­லுள்ள இரட்­ச­ணிய சேனை இல்­லத்தில் அனு­ம­திக்­கு­மாறும் உத்­த­ர­விட்­டுள்ளார். மேலும், இருவரையும் சட்ட வைத்திய பரிசோதனை க்குட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.







நாவற்குழி ரயில் நிலையம் மீது 

இனந்தெரியாதோர் தாக்குதல்!
[ புதன்கிழமை, 15 யூலை 2015, 12:33.03 AM GMT ]
நாவற்குழி, தச்சன்தோப்பு ரயில் நிலையம் மீது நேற்று செவ்வாய்க்கிழமை இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த நிலையத்தில் ஊழியர்கள் எவரும் இல்லாத பிற்பகல் 3 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் ரயில் நிலையத்தின் கண்ணாடிகள் மற்றும் மலசலகூடக் கதவுகள் என்பன உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அந்தப் பகுதியில் மதுபானப் போத்தல்கள் உடைக்கப்பட்டு காணப்படுகின்றன.
சாவகச்சேரிப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.