யாழ்ப்­பாணம் நுணாவில் பகு­தியில் சிவில் உடையில் வானில் வந்­த­வர்­க ளால் இளம் குடும்­பஸ்தர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது­செய்­யப்­பட்டுள்ளார்.
இது தொடர்பில் கைது செய்யப்பட்டவரின் தாயாரால் யாழ். மனி­த­ உ­ரிமை ஆணைக்­கு­ழுவில் நேற்றை­ய ­தினம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இரா­ச­துரை ஜெயந்தன் என்ற இளம் குடும்­பஸ்­தரே இவ்­வாறு கைது­செய்­யப்­பட்டுள்ளார்.
கைது சம்­பவம் தொடர்­பாக இளம் குடும்­பஸ்­த­ரது தாயார் தெரி­வித்­த­தா­வது,
கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை காலை எனது வீட்­டிற்கு மோட்டார் சைக்­கிளில் சிவில் உடையில் ஒரு­சிலர் வந்­தனர். அவர்­களின் கையில் துப்­பாக்கி இருந்தது. இந்­நி­லையில் அவர்கள் தம்மை பொலிஸார் எனத் தெரி­வித்­த­துடன் எனது வீட்டை சோத­னை­யிட வேண்டும் எனக்­கூறி சோத­னை­யிட்­டனர்.
அவ்­வாறு குறித்த நபர்கள் சோத­னை­யிட்­டுக்­கொண்­டி­ருக்கும் வேளை மேலும் சிலர் வானில் அங்கு வந்­தனர். இந்­நி­லையில் வீட்­டி­லி­ருந்த எனது மகனை வானில் வந்­த­வர்கள் கைவி­லங்­கிட்டு அழைத்துச் செல்ல முற்­பட்­டனர்.
எனது மகனை எதற்­காக கைது செய்­கி­றீர்கள் என அவர்­க­ளிடம் நான் கேட்­ட­போது அவர்கள் என்னை அருகில் வர­வேண்டாம் விலகிப் போங்கள் எனத் தெரி­வித்­தனர்.
எனது மகன் எந்தக் குற்­றமும் செய்­ய­வில்­லையே எதற்­காக அவரைக் கைது­செய்­கி­றீர்கள் என நான் மீண்டும் அவர்­க­ளிடம் கேட்­ட­போதுஇ எனது மக­னோடு மட்­டும்தான் பேச­வேண்­டி­யுள்­ளது எனவும் மகனை எதற்­காக கைது செய்­கின்றோம் என்­ப­தெல்லாம் விசா­ர­ணை­களின் பின்னர் உங்­க­ளுக்குத் தெரி­ய­வரும் என கூறி­விட்டு எனது மகனை கைவி­லங்­கிட்டு வானில் ஏற்றிச் சென்­றனர்.
அவ்­வாறு அவர்கள் எனது மகனை கைது­செய்து அழைத்­துச்­செல்­லும்­போது அதில் ஒரு நபர் என்­னிடம் வந்து 2 மணி­நேரம் கழித்து அரி­யா­லையில் உள்ள தமது அலு­வ­ல­கத்­திற்கு வரு­மாறு கூறிச் சென்றார். அத்­துடன் எனது வீட்டில் நின்ற இரு­மோட்டார் சைக்­கி­ளையும் அவர்கள் எடுத்­துச்­சென்­றுள்­ளனர். இவ்­வாறு குறித்த கைது நட­வ­டிக்கை சம்­பவம் இடம்­பெற்­ற­தை­ய­டுத்து உட­ன­டி­யா­கவே நான் சாவ­கச்­சேரிப் பொலிஸ் நிலை­யத்தில் எனது மகன் சிவில் உடை தரித்­த­வர்­களால் கைது­செய்­யப்­பட்­டுள்ளார் என்ற அடிப்­ப­டையில் முறைப்­பாட்டை மேற்­கொள்ளச் சென்­றி­ருந்தேன்.
இதன்­போது அங்­கி­ருந்த பொலிஸ் அதி­காரி குறித்த முறைப்­பாட்டை தாம் பெற்­றுக்­கொள்ள முடி­யாது எனத் தெரி­வித்­த­துடன் எனது மகனை கைது­செய்­த­வர்கள் கூறிய இடத்­திற்கு செல்­லு­மாறு என்­னிடம் தெரி­வித்தார்.
இந்­நி­லையில் எனது மகனை மீட்க கைது­செய்­த­வர்கள் கூறிய இடத்­திற்குச் சென்­றி­ருந்தேன். இதன்­போது அங்கு எனது மகனை கைது­செய்ய வந்­த­வர்­களில் ஒருவர் நின்றார். அவ­ரிடம் எனது மகன் எங்கே என வின­வி­ய­போது, எனது மகனை வாக­னத்தில் தாம் வைத்­தி­ருப்­ப­தா­கவும் அவரை பார்க்­க­மு­டி­யாது எனவும் மறுநாள் என்னை வவு­னி­யா­விற்கு வரு­மாறு கூறி தொலை­பேசி இலக்கம் ஒன்­றையும் தந்­தி­ருந்தார்.
குறித்த நபர் கூறி­ய­தற்கு அமைய மறுநாள் வவு­னியா சென்று அவர்கள் குறிப்­பிட்ட இடத்­திற்கு சென்­றதன் பின்னர் அவர்கள் தந்த தொலை­பேசி இலக்­கத்­திற்கு தொடர்பை மேற்­கொண்டேன். தொலை­பே­சியில் உரை­யா­டிய ஒரு நபர் என்னை நிற்கும் இடத்­திற்கு அருகில் உள்ள சிறு­வீதி பகுதி ஊடாக வரு­மாறும் அவ்­வாறு வந்தால் அலு­வ­லகம் காணப்­படும் எனவும் தெரி­வித்தார். அவர் கூறி­ய­தற்கு அமைய அந்த அலு­வ­ல­கத்­திற்கு சென்று எனது மகன் எங்கே என அங்கு நின்ற அதி­கா­ரி­யிடம் கேட்­ட­போது, எனது மகனை பூசா­வுக்கு கொண்டு சென்றுவிட்டதாக கூறினார் என குறித்த தாய் தெரிவித்தார்.
இதேவேளை கைதுசெய்யப்பட்ட குறித்த நபர் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினராக இருந்து கடந்த 2011 ஆம் ஆண்டு புனர்வாழ்வின் பின்னர் குடும்பத்தாருடன் இணைந்திருந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.