2.8.19

செய்திகளில் ஊரும் அயலும் 2019/2

யாழில் கிளர்ந்தெழுந்த மக்கள் அதிரடியாக கைது ! பொலிஸ் நிலையம் முன்பு பதற்றம்

15-12-2019
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் மின் காற்றாலை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் , பிரதேச சபை உறுப்பினர் உட்பட 4 பேர் சாவகச்சேரி பொலிஸாரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு சுமார் 50 இற்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாவகச்சேரி பொலிஸ்நிலையம் முன்பாக கூடியிருந்தனர். இதனால்அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் மின் காற்றாலை அமைக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டமைக்கு எதிராக கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டம் மோதலில் நிறைவடைந்திருந்தது.
மறவன்புலவில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்கருகில் மின் காற்றாலை அமைக்கப்படுவதாக மக்கள் போராட்டங்கள் பலவற்றை மேற்கொண்டதையடுத்து அதனை ஆராய்வதற்காக பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இதற்கிடையில், மின் காற்றாலை அமைக்கும் பணிக்கான உபகரணங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனரக வாகனங்களில் கொண்டுவரப்பட்டிருந்ததோடு, மின் காற்றாலைக்கான அலுவலகம் அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பணிகளை இடைநிறுத்துமாறும் கோரினர்.
இதன்போது இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதோடு, ஆயுதங்களாலும் தாக்கிக்கொண்டனர்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த சாவகச்சேரிப் பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததோடு, பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியிருதனர்.
இந்த நிலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்ட மேற்படி நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாவகச்சே
ரியில் டெங்குநோய் அதிகரிப்பு



            19-11-2019


        15-10-2019

தென்மராட்சியில் கத்தி குத்து; இருவர் காயம்!

4-10-2019
1யாழ்ப்பாணம் - தென்மராட்சி, வெள்ளாம்போக்கட்டி பகுதியில் நேற்று இரவு 9.50 மணியளவில் இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த மூவரை இடைமறித்து இனம் தெரியாத நபர்கள் துரத்தித் துரத்தித் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது இரும்புக் கம்பி மற்றும் கத்தியாலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் சாவச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றுமொருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மின் காற்றாலை அமைக்க  அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் 

 2019-09-18 12:03:37

யாழ்ப்பாணம் – மறவன்புலவு பகுதியில் மக்கள் குடியேற்றத்திற்கு அண்மையில் மின் காற்றாலை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் மறவன்புலவு மக்களால் இன்று கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனின் மக்கள் சந்திப்பு கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் நிலையில், இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனையடுத்து போராட்டக் களத்திற்கு விரைந்த ஆளுநர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
அதன் பின்னர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளரை உடனடியாக வருகை தருமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு போராட்டக்காரர்களின் 5 பேரை தன்னுடனான சந்திப்பில் கலந்துகொள்ளுமாறும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.







                       9-9-2019


         8-9-2019







 15-8-2019

சாவகச்சேரியில் தீ விபத்து.; இரு வர்த்தக நிலையங்கள் முற்றாக சேதம்

8-8-2019

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட ஏ 9 பிரதான வீதியின் மடத்தடி சந்தியில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் இன்று இரவு 9.00 மணியளவில் தீ விபத்து  ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள வெல்டிங் கராஜ் மற்றும் பழக்கடை  ஒன்றுமே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
இத்தீவிபத்தில் பழக்கடை முற்றாக எரிந்துள்ளது. இவ்விபத்தையடுத்து யாழ்மாநகரசபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்ததையடுத்து மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் குறித்த இடத்தில் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.





3-8-2019



2-8-2019